பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

ஊட்டி

ஊட்டியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கட்டுமான பணியின்போது உயிரிழந்த கூடலூர் அருகே ஓவேலி சின்னசூண்டி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரது குடும்பத்துக்கு தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் நிவாரண தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

110 மனுக்கள்

மேலும் ஊட்டி அருகே தலைகுந்தா உல்லத்தி கிராமத்தில் உயிரிழந்த கார்த்திக் என்பவரது தாயாருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை, மனைவிக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இது தவிர இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.500-க்கான காசோலை மற்றும் சான்றிதழ், 2-வது பரிசாக ரூ.300-க்கான காசோலை மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 110 மனுக்களை வழங்கினார்கள். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) மணிகண்டன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com