தீபாவளியை கொண்டாட சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தீபாவளியை கொண்டாட சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை கொண்டாட சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 61 பேர் தங்கள் பணிக்கால பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசிற்கும், சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்களை கொடுத்திருந்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், ரூ.23 கோடிக்கும் மேல் உள்ள பணப்பலன்களை வழங்கும் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பாரதிய புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு சற்று காலஅவகாசம் தேவைப்படும் எனவும் புதுச்சேரி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பணப்பலன்கள் வழங்கப்படாததால், தீபாவளியை கொண்டாட முடியாமல் பணியாளர்களால் சிரமப்படுவதாக, மனுதாரர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தீபாவளி பண்டிகை வருவதால், 61 பணியாளர்களுக்கும் ஆறுதல் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வீதம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகை பணியாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்து டிசம்பர் 2-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com