புதுக்கோட்டை தேர் விபத்து: தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தேர் விபத்து: தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன்
Published on

சென்னை,

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எதிர்பாராமல் நிகழ்ந்த தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சென்று ஆறுதல் வழங்கினோம். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தேர் விபத்து தொடர்பாக இரண்டு தற்காலிக பணியாளர்கள் மீது தேவையில்லாமல் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர்களும் எங்களிடம் கூறியுள்ளனர். அவருடைய வழக்கை ரத்து

செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்னர் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com