

தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன்காடு அல்லிகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது மகள் பெவினா (15) பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவர், மற்றொரு மகளுடன் சேர்ந்து மொபட் ஓட்டிப் பழகியுள்ளார். அவர் தனது சகோதரியுடன் அல்லிகுளம்-பேரூரணி ரோட்டில் மொபட்டை ஓட்டி பழகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மொபட் மோதியது.
இதில் மொபட்டிலிருந்த 2 சகோதரிகளும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெவினா பரிதாபமாக இறந்தார். அவரது சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் ஓட்டிப்பழகியபோது விபத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.