கொட்டாம்பட்டி அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது
கொட்டாம்பட்டி அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா
Published on

    கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஆடிமாத சொட்டகார அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்னர் பிடி மண் கொடுக்கபட்டு கிராம மந்தையில் அரண்மனை புரவிகள் மற்றும் சாமி சிலைகள் மண்ணால் செய்யபட்டு வர்ணம் பூசி தயார் செய்யப்படும். விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு புரவிகள் அலங்கரிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மாலை புரவிகள், சாமி சிலைகள் மேளதாளம் வான வேடிக்கையுடன் ஊர்வலமாக மலையடிவாரத்தில் உள்ள சொட்டகார அய்யனார் கோவிலுக்கு சுமந்து சென்று பொதுமக்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மழைபெய்து விவசாயம் செழிக்கவும் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com