முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுய சரிதை நூல் வெளியீடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) சுயசரிதை புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுய சரிதை நூல் வெளியீடு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். உங்களில் ஒருவன் (பாகம்-1) புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com