எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ.40 லட்சம் பறிமுதல்

மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 இலட்சம் கைப்பற்றப்பட்டன
எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ.40 லட்சம் பறிமுதல்
Published on

பொதுப்பணித்துறையில் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தமிழகம் முழுவதும் 14 இடங்களில் சோதனை நடத்தியது.

எ.வ.வேலுக்கு சொந்தமான திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங் களில் 7 குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 35 பேர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் திரு.ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம், சென்னை அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் மீதும் மற்றும் 9 மாநில அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் (தனி நபர்) மீதும் வழக்கு பதியப்பட்டது. அவ்வழக்கானது 2022ம் ஆண்டு அரசு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பயண தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 2022ம் ஆண்டில் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக கூறுப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பராமரிப்பு உட்பிரிவு மற்றும் பிற இடங்களுக்கான பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

இதில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில், மார்ச் 25 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் ரூ.3.23 கோடி மேற்படி சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு பணம் ரூ.3.23 கோடி மோசடி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவைகள் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 இலட்சம் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணையில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com