ரெயில்வே ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை

ரெயில்வே ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை
ரெயில்வே ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா முருக்கம்பட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 58), ரயில்வே ஒப்பந்ததாரர்.

இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 28 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சம்பத் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அ

வரை உடனடியாக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com