கடலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்; விவசாயிகள் கவலை

கடலூர் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்; விவசாயிகள் கவலை
Published on

10 ஆயிரம் வாழைகள் சேதம்

கடலூர் அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தனர். வாழை தார் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல 10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இதுகுறித்து ராமாபுரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தோம். நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றில் பெரும்பாலான வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வாழைகளை அதிகாரிகள் கணக்கீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் திருப்பணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 100 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றில் நெற்பயிர்களும் விளை நிலங்களிலேயே சாய்ந்து சேதமடைந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com