

சென்னை,
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற இடம் கூட கிடைக்காமல் மக்கள் கடும் அவதியுற்றனர். நோயாளிகளின் வருகை அதிகரித்தபோதும், மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் தற்போது கொரோனாபரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா நோயாளிகளே இல்லாத மருத்துவமனையாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசைகட்டி நின்ற மருத்துவமனையில் இன்று கொரோனா நோயாளிகள் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாக மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறினார்.