ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 வருடங்களாக சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தருகிறது.

அ.தி.மு.க. அரசு இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 19.2.2014 அன்றே முடிவு எடுத்து மத்திய அரசின் கருத்தையும் கேட்டிருந்த நிலையில், ஏறக்குறைய 4 வருடத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று விடுதலையை நிராகரித்து இருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவாகவே தி.மு.க. கருதுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com