நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு
Published on

சென்னை,

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், "ரமலான் மாதப்பிறை நேற்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com