ராமஜெயம் கொலை வழக்கு: 3-வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
ராமஜெயம் கொலை வழக்கு: 3-வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது
Published on

சென்னை,

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உள்பட 13 பேர் இருந்தனர். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார்.

இந்தநிலையில் 13 பேரிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 4 பேரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com