ராமானந்த சுவாமிகள் குருபூஜை விழா

சிவகிரியில் ராமானந்த சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
ராமானந்த சுவாமிகள் குருபூஜை விழா
Published on

சிவகிரி

சிவகிரி ஜீவாதெருவில் ராமானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ராமானந்தருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமானந்தசுவாமிகள் சீடர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com