இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதி ராமேசுவரம் படகு சேதம்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் மீது இலங்கை ரோந்து கப்பல் மோதி படகு சேதம் அடைந்தது.
இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதி ராமேசுவரம் படகு சேதம்
Published on

ராமேசுவரம், 

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் மீது இலங்கை ரோந்து கப்பல் மோதி படகு சேதம் அடைந்தது.

விசைப்படகு மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதில் ஒரு படகில் 5 மீனவர்கள் இருந்தனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த படகை விரட்டி அடித்துள்ளனர்.

நாட்டு படகு சேதம்

அப்போது ரோந்து கப்பல் ஒன்று மோதியதில் இந்த படகின் பின்பகுதியில் லேசாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் மீனவர்கள் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com