ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
Published on

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஓணம் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிக்கூட வளாகத்தில் மாணவ- மாணவிகள் மிகப்பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர். மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கூட செயலாளர் கே.செல்வராஜ், பொருளாளர் ஆர்.குணசேகரன், முதல்வர் டி.நதியா அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை உற்சாகப்படுத்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com