ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை

கோப்புப்படம்
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கை ஒட்டி அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 07-07-2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்திற்கு மட்டும். சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 07-07-2025 (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும். அதனை ஈடுசெய்யும் பொருட்டு 19-07-2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.