15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on

தண்டராம்பட்டு அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரகுமார் (வயது 26), தொழிலாளி. இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்து உள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 20-4-2018-ம் ஆண்டு அச்சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ருத்ரகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

10 ஆண்டு சிறை

அப்போது சிறுமியை ருத்ரகுமாருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் ருத்ரகுமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com