நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில்ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில்ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் தாலுகாதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதத்துக்கான ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய 8 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடந்தது.

நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் சின்னதம்பி தலைமை தாங்கினார். இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், செல்போன் எண் மாற்றம் உள்பட 38 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டது. அதேபேல் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றது. அவற்றில் பெரும்பாலான கேரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com