நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,400 டன் ரேஷன் அரிசி வந்தது

நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,400 டன் ரேஷன் அரிசி வந்தது
Published on

ஆந்திர மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,400 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வந்தது. 42 வேகன்களில் வந்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் 120 லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் அவை நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com