மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது

மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் பழனிக்குமார் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com