செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!
Published on

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், உபரிநீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உபரி நீர் வெளியேற்றம் 4 ஆயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,028 கன அடியாகவும் உள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com