பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உறவினர் கைது

வாணாபுரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உறவினர் கைது
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மனைவி தரணி. இவர்களுக்கு 2 மகள்கள். பிரபு பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 16) வாணாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பிரியதர்ஷினி ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது உறவினரான சங்கர் மகன் பிரசாத் (26) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாத் மீது வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்த நிலையில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமியிடம் சரணடைந்தார்.

இதனையடுத்து போலீசார் பிரசாத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com