பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை புதுப்பேட்டையில் பரபரப்பு

பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை புதுப்பேட்டையில் பரபரப்பு
Published on

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் விஜயகுமார் (வயது 27). இவர்  தனது தாயார் விசாலாட்சியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு குச்சிபாளையம் கொய்யாத்தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரிய கள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ் என்பவருக்கும் விசாலாட்சிக்கும் இடையே முந்திச்செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அஜய், பாலா ஆகியோர் விசாலாட்சியை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த விசாலாட்சியின் உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, விசாலாட்சியை தாக்கிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாலாட்சியை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்ற உறவினர்கள் அங்கிருந்து, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com