செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று காலை 9 மணியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் எரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 22.35 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

உபரி நீர் வடிந்து செல்லும் ஆற்றங்கரையில் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com