செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு!
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்துக்கேற்ப ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com