

திருப்பூர்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
திருப்பூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமராவதி அணையிலிருந்து ஜூலை 15 - 21ம் தேதி வரை 6 நாட்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.