அமைச்சு பணியாளர் பணியிடை நீக்கம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சு பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அமைச்சு பணியாளர் பணியிடை நீக்கம்
Published on

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வந்தவர் விஸ்வநாதன். இவர் சக பெண் ஊழியருக்கு தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு புகார் வந்தது. இதையடுத்து விஸ்வநாதனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com