சாலையோர புதர்கள் அகற்றம்

காட்டு யானை தாக்கி பெண் பலி எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.
சாலையோர புதர்கள் அகற்றம்
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் சுனிதா. இவரது மகள் அஸ்வதி. கடந்த 27-ந் தேதி 2 பேரும் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்த சென்ற போது, அருகில் இருந்த மூங்கில் காட்டுக்குள் இருந்த வந்த காட்டு யானை 2 பேரையும் தாக்கியது. இதில் தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பலனின்றி சுனிதா இறந்து விட்டார். இதற்கிடையே வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோரஞ்சால்-சப்பந்தோடு சாலையில் உள்ள மூங்கில்கள், புதர்களை அகற்ற வேண்டும், யானை தாக்கிய உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரஞ்சால்-சப்பந்தோடு சாலையோரம் உள்ள மூங்கில்கள், முட்புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com