சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளக்கல் மேடு வரை சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள், ஓலை குடிசைகள் நேற்று அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கனிமொழி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இளைஞர் ஒருவர் அதிகாரியிடம், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, வருவாய்த்துறையினர், சர்வேயர் வரும்போது அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com