கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய நடைமுறையினால் எளிய முறையில் கடன் பெறும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த வட்டியில், கடன் வழங்குவதால் விவசாயிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் மேலும் மேம்பட்டு உயர்வதற்கு கூட்டுறவு வங்கிகளுக்கு பாதுகாப்பு அரணாக மத்திய அரசு திகழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com