சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மேகமலையில் 6 தனியார் விடுதிகளுக்கு சீல் - வருவாய்த்துறை அதிரடி

மேகமலையில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட தனியார் விடுதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மேகமலையில் 6 தனியார் விடுதிகளுக்கு சீல் - வருவாய்த்துறை அதிரடி
Published on

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை பகுதியில் முறையான அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் சுற்றுலா விடுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேகமலை பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக வனப்பகுதியாக இருப்பதால், அங்கு முறையான அனுமதியின்றி செயல்பட்ட தனியார் விடுதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 6 தனியார் சொகுசு விடுதிகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் மேகமலையில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் மற்ற அனைத்து விடுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com