குமரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு

குமரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது.
குமரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு
Published on

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 17-ந்தேதி தொடங்கினர். குமரி மாவட்டத்தில் 350-க்கும் அதிகமான வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதன் காரணமாக தாலுகா அலுவலகங்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை பிரிவுகள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com