

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்துள்ளது. இந்த கோபுரக் கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏதுவாக கடிகாரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் பழுதுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெற உள்ளது. எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25 நாட்களுக்கு ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரம் இயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.