கடலூரில் சாலை விபத்து; 3 பேர் பலி

கடலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
கடலூரில் சாலை விபத்து; 3 பேர் பலி
Published on

கடலூர்,

கடலூரின் வேப்பூர் அருகே ரெட்டை குறிச்சி என்ற பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த கார், லாரி ஒன்றின் மீது பின்புறம் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அகமது ஷெரீப், நிஷா மற்றும் அசீமா பானு என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com