தி.மு.க.வினர் சாலை மறியல்

தி.மு.க.வினர் சாலை மறியல் நடத்தினர்.
தி.மு.க.வினர் சாலை மறியல்
Published on

தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை ஒலியமங்கலத்தில் நடத்தவிடாமல் அ.தி.மு.க.வினர் கொடியை ஊன்றி இடையூறு செய்வதாகவும், அதற்கு காரையூர் போலீசார் துணை போவதாகவும் கூறி ஒலியமங்கலம்-காரையூர் சாலையில் தி.மு.க. இளைஞரணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, துணைச்செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com