சாலை பாதுகாப்பு வார விழா

ஆம்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வார விழா
Published on

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே போக்குவரத்துத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும், அனைவரும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு வாசகங்கள் அடைய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், அமர்நாத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com