சாலை பணிகள் தொடக்கம்

சாலை பணிகள் தொடங்கியது.
சாலை பணிகள் தொடக்கம்
Published on

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒகளூர் ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் அம்பேத்கர் தெரு, சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய தெருக்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, ரேஷன் கடை சாலை உள்ளிட்ட இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 7 பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். திருமாந்துறை ஊராட்சியில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் நோவா நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள், சிவன் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 3 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.10 லட்சத்தில் 4 கி.மீ. நீளத்திற்கு ஒகளூர் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com