சுற்றித்திரியும் குரங்குகள்

திருக்கடையூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றித்திரியும் குரங்குகள்
Published on

திருக்கடையூர்:

திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொந்தரவால் வீடுகள் மற்றும் கடைகளில் வைத்துள்ள பொருட்களான அரிசி, காய்கறி, பழவகைகளை குரங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com