வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு


வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 April 2025 3:15 AM IST (Updated: 18 April 2025 4:44 AM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு ஆறுபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 70). இவரது கணவர் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் அன்னம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றார்.

அப்போது, வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டினர். ஆனால் அவர் திறக்காததால், வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அன்னம்மாளை மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு நடந்த சம்பவத்தை அன்னம்மாள் கூறினார்கள். அவர்கள் உடனடியாக வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story