திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை - பொதுமக்கள் பீதி...!

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை - பொதுமக்கள் பீதி...!
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.எம். காலனி 4-வது குறுக்கு தெருவில் லியான் என்பவர் வீடு, 7-வது குறுக்கு தெருவில் ராஜகோபால் என்பவர் வீடு, தாடிக்கொம்பு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசாமி காலனி 7-வது தெருவில் அருள்தாஸ் என்பவர் வீடு என அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்ப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com