

கரூர்,
கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது;-
தற்போது வேளாண்மை கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசுத் தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.