

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் டைகர் ஏர்வேஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுகைல் அகமது (வயது 21) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.30 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 501 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சுகைல் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.