சென்னை விமான நிலையத்தில் ரூ.46.92 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மின் கருவி பெட்டிக்குள் மறைத்து, கடத்தி வரப்பட்ட ரூ.46.92 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.46.92 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

சென்னை,

ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. இதில் வந்த பயணியர் இருவரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அதிலிருந்த இரு மின் கருவி பெட்டிகளை பிரித்து பார்த்ததில், 8 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு தங்க சங்கிலிகளும் உடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை மதிப்பிட்டதில் ரூ.46.92 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com