உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com