தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மறுதேர்தல் நடைபெறும் கடலூர் மாவட்ட புவனகிரியை தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com