புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

நிலக்கோட்டை அருக புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடந்தது.
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
Published on

நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மைக்கேல்பாளையத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு மறைவட்ட அதிபர் எட்வர்டு பிரான்சிஸ், மைக்கேல்பாளையம் பங்குத்தந்தை சேவியர்ராஜ் ஆகியோர் திருப்பலி நடத்தினர். பின்னர் 10 மின்ரத திருத்தேர்கள் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் நேற்று திருப்பலியும், பகலில் தேர் பவனியும் நடைபெற்றது. பின்பு இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாக குழுவினர், அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் பங்கு அமைப்புகள் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com