புனித சவேரியர் ஆலய பெருவிழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியர் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புனித சவேரியர் ஆலய பெருவிழா
Published on

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் நாப்பாளையத் தெருவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு 148-ம் ஆண்டுப்பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உசுட்டேரி ஏசுநசரேன் கொடி பவனியை தொடங்கி வைத்து திருப்பலி நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் தேர் பவனியும், விழாவின் முக்கிய நிகழ்வாக 3-ந் தேதி பெருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி, ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது. இவ்விழாவில் புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ்கலிஸ்ட் கலந்துகொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com