ஈரோட்டில் போதை நோக்கில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனையா? - போலீசார் அதிரடி சோதனை

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோட்டில் போதை நோக்கில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனையா? - போலீசார் அதிரடி சோதனை
Published on

ஈரோடு,

ஈரோட்டில் போதை நோக்கில் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுகிறதா? என்பதை அறிய டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு மருந்தகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், மருந்தக ஆய்வாளர்களும் பங்கேற்று மருந்துகள் மற்றும் விற்பனை நடைமுறைகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மருந்தக உரிமையாளர்களிடம், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் வலி நிவாரண மாத்திரைகள் கேட்பவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com