சேலம்: சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சேலம் அருகே விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை
Published on

கொளத்தூர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூல் கரடுபட்டி . தமிழக-கர்நாடக வன எல்லைப் பகுதியில் அருகே அமைந்துள்ள.

இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று புஷ்பநாதன் என்பவர் தனது தோட்டத்தில் அமைத்துள்ள மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதமன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானையை கால்நடை மருத்துவர் மூலம் சம்பவ இடத்திலேயே உடல் கூராய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் கெளதமன் கூறுகையில்,

விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக இதுபோன்ற சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனவிலங்குகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com